Adada Onnum Solladha (From "Vasuvum Saravananum Onna Padichavanga") 作词 : Na. Muthukumar 作曲 : D. Imman அடடா ஒண்ணும் சொல்லாத அழகா என்னைக் கொல்லாத அணைச்சா தள்ளிச் செல்லாத அணையைக் கட்டிப் போடாத அடடா பிரம்மன் என பூப்போல படைச்சானே இதழில் தேன் எடுக்க நீ வரியா ஆனால் பார்வையைத் தான் தீப்போல குடுத்தானே ஹாய்யோ உன்னால் எரிஞ்சேன் நானே அடடா ஒண்ணும் சொல்லாத அழகா என்னைக் கொல்லாத அனச்சா தள்ளிச் செல்லாத அனையக் கட்டிப் போடாத அடடா பிரம்மன் உன்னை பூப்போல படச்சானே இதழில் தேன் எடுக்க நான் வரவா ஆனால் பார்வையைத் தான் தீப்போல கொடுத்தானே ஹாய்யோ பெண்ணே எரிஞ்சேன் நானே ◇ இசை ◇ வயதும் மனதும் உனைக் கண்டாலே இன்று கலங்குதடா நான் துடிப்பேன் வல்லினம் மெல்லினம் இவை தமிழோடு உண்டு இடையினம் தான் நான் ரசிப்பேன் குறும்பாக நீ சிரிக்க சாட்சி போட அதற்கு இந்த ஊரில் இல்ல விலையே ஐம்பொன்னில் பஞ்சும் கொஞ்சம் சேர்த்துதானே அழகாக செஞ்சு வைச்ச சிலையே இரு இதயம் இணையும் தருணம் போகாதே அடடா ஒண்ணும் சொல்லாத அழகா என்னைக் கொல்லாத அணைச்சா தள்ளிச் செல்லாத அணையைக் கட்டிப் போடாத ◇ இசை ◇ இதழும் இதழும் அடி ஒன்றாக சேர விரும்பிடுதே நெருங்கிடுதே இளமைக் கரையில் ஒரு புயல் வந்து சீண்ட இடைவெளிகள் குறைந்திடுதே சிரிச்சாலே கன்னம் எங்கும் வண்ணம் பூசும் அழகான பஞ்சவர்ண கிளியே..... சில நேரம் உன்னை எண்ணி உள்ளம் தேடும் சீ போடா சிக்க வைச்ச என்னையே இரு இதயம் இணையும் தருணம் போகாதே அடடா ஒண்ணும் சொல்லாத... அழகா என்னைக் கொல்லாத... அணைச்சா தள்ளிச் செல்லாத... அணையைக் கட்டிப் போடாத...